தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாப்பாநாடு காவல்துறை ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாப்பாநாடு காவல்துறை ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார்.மேலும் மாணவ- மாணவிகளுக்கு கோவிட்-19 , புதுவகையான OMICRON வைரஸ் மற்றும் போதைப்பொருள் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் திரு. எம். செல்வராஜ் , பள்ளித் தாளாளர் திரு. சா.சஞ்சய், பொருளாளர் திரு சு.சுகன். தலைமை ஆசிரியர் திருமதி. சு.நாகரெத்தினம்,பள்ளியின் இயக்குனர்கள் நல்லாசிரியர் திரு.கே.துரைராஜன் . திரு. ஜி. பரத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *